படம்: வைதேகி காத்திருந்தாள்
இசை: இளையராஜா
பாடியவர்: பி.சுசீலா
ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ஸ்ரீ ராமனோடு பூ மாலை போட
வைதேகி உள்ளம் வாடுது
ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு காணக் குயில்
நெஞ்சிக்கொரு வஞ்சிக் கொடி நான் தானய்யா
கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு காணக் குயில்
நெஞ்சிக்கொரு வஞ்சிக் கொடி நான் தானய்யா
தத்தித் தவழும் தங்கச் சிமிழ் நான்
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழ் நான்
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கே எனக்கென்ன பேச்சு
நீ தானே கண்ணா நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணா
ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ஸ்ரீ ராமனோடு பூ மாலை போட
வைதேகி உள்ளம் வாடுது
ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் எனக்
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் எனக்
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
அத்தை மகனோ மாமன் மகனோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீ தான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து தீண்டாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்
ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ஸ்ரீ ராமனோடு பூ மாலை போட
வைதேகி உள்ளம் வாடுது
ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது … காத்தாடி போலாடுது
Rated 4.6/5 based on 28 votes
0 Response to "ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு !"
Post a Comment