LinkWithin

சினிமாவும் நானும்




சினிமா!
உயர்ந்த பாராட்டுக்களையும், அதே நேரத்தில் தவறான விமர்சனங்களையும் சம விகிதத்தில் பெற்று உயர்ந்து கொண்டிருக்கும் ஒரே மீடியா சினிமா மட்டுமே.
"குப்பையில் கிடந்தாலும் குண்டுமணியின் நிறம் போகுமா?" என்ற பழமொழியைப் போல, யார் என்ன பேசித்திரிந்தாலும் சினிமாவின் மதிப்பு ஒருபோதும் தாழ்ந்து விடப் போவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனாலும் இன்று தரமான சினிமாக்கள் வெளிவரவில்லை என்பதும் வேதனையான உண்மைதான்.

பொதுவாக, தவறு செய்யும் ஒரு மனிதனை நாம் திருத்த வேண்டும் என்று முடிவெடுத்தால், அவனுக்கு நல்ல விஷயங்களைக் கற்றுத்தர வேண்டும். மேலும், அவனது சின்னச் சின்ன நல்ல செயல்களையும் நாம் பாராட்ட வேண்டும். அப்போதுதான் அவன் முழுமையாக திருந்துவதற்கு அது வாய்ப்பாக அமையும். ஆனால், இன்று தரமான சினிமா வேண்டும் என்று எதிர் பார்ப்பவர்கள்(?) அனைவரும், சினிமாவைப் பற்றி கேவலமாகவே பேசித்திரிகிறார்கள். ஒரு நல்ல தரமான சினிமா எப்படி இருக்க வேண்டும் என்று அவர்களால் சொல்லத் தெரியவில்லை. "இந்த இந்தக் காட்சிகளுடன், இப்படிப்பட்ட கதை அமைப்புடன், இந்த நடிகரை வைத்து எடுத்தால் ஒரு தரமான சினிமா வெளிவரும்.." என்று யாராவது ஒருவர் சொல்லியிருப்பாரேயானால் அவருக்கு நான் தலை வணங்குகிறேன்!

இல்லை, "எனக்கு தவறுகள் மட்டும் தான் தெரியும், நான் தவறுகளை மட்டும் தான் கற்றிருக்கிறேன், அதனால் நான் தவறாகத்தான் விமர்சனம் எழுதுவேன்.." என்று யாரேனும் சொல்வாறேயானால், அவரது அறியாமையை நினைத்து நான் பரிதாபப்படுகிறேன். ஒருவனது எழுத்துக்களைப் பார்த்தால் அவனது குணாதிசயத்தை அறிய முடியும் என்று சொல்கிறது மனோதத்துவம்!

எனக்கு சினிமாவைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நிறைய இருந்தது... ஆனால் யாரிடம் கற்றுக் கொள்வது? சினிமாவைப் பற்றி தெரிந்தவர்கள் யார் இருக்கிறார்கள்? சினிமா என்பது எதற்காக உருவாக்கப் பட்டது? தரமான சினிமா எது? என்ற பல கேள்விகளோடு நான் சென்ற போது, யாருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. இது தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை, ஆனால் "சினிமா என்பது யாருக்கானது?" என்பது கூட பலருக்குத் தேரியவில்லை!

எனவே நான் நேரடியாக சினிமாவிடமே எனது சந்தேகங்களைக் கேட்கலாம் என்று முடிவெடுத்தேன்... முதலில் என்னிடம் சிக்கியது ஒரு கேமரா!


ஸ்டார்ட் கேமெரா... ஆக்க்ஷன் !


தொடரும்...

Rated 4.6/5 based on 28 votes

0 Response to "சினிமாவும் நானும்"

Post a Comment

Select Category

anushka KJ ஜேசுதாஸ் S.ஜானகி SN.சுரேந்த‌ர் SP.பாலசுப்ரமணியம் அக்னி நட்சத்திரம் அமைதிப்படை அருண்மொழி அலைகள் ஓய்வதில்லை அவள் அப்படிதான் அன்புள்ள ரஜினிகாந்த் இதயத்தை திருடாதே இதயம் இளமை காலங்கள் இளையராஜா உமா ரமணன் உளியின் ஓசை உன‌க்காவே வாழ்கிறேன் ஊரு விட்டு ஊரு வந்து ஊரெல்லாம் உன் பாட்டு என் ராசவின் மனசிலே கடலோரக் கவிதைகள் கமல் கார்த்திக் கிழக்கு வாசல் குங்குமச் சிமிழ் குஷ்பு கேப்டன் மகள் கேளடி கண்மணி சத்யராஜ் சத்ரியன் சரத்குமார் சித்ரா சிவா சினிமா கட்டுரைகள் சினிமாவும் நானும் சின்ன தம்பி தர்மதுரை தாலாட்டு பாடவா தீப‌ன் ச‌க்க‌ர‌வ‌ர்த்தி நந்தவனத் தேரு பாட்டு வாத்தியார் பானுப்பிரியா பி.சுசீலா பிதாமகன் பிரபு புது புது அர்த்த‌ங்க‌ள் புன்னகை மன்னன் பூவே பூச்சூடவா பெரிய வீட்டு பணக்காரன் போதிதர்மர் ம‌லேசியா வாசுதேவ‌ன் மறுபடியும் மனோ முரளி மோகன் மௌனம் சம்மதம் ரஞ்சிதா ரஜினிகாந்த் ராதா ராஜா கைய வச்சா ரேவதி வண்ண வண்ண பூக்கள் வள்ளி வாலி விஜயகாந்த் வைதேகி காத்திருந்தாள் வைரமுத்து ஜெயச்சந்திரன் ஸ்ரீ ராம் பார்த்த சாரதி ஸ்வர்ணலதா ஹன்யா ஹீரா